தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்கலாம் - தேர்தல் ஆணையம்


தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்கலாம் - தேர்தல் ஆணையம்
x

தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாகமுள்ள மக்களுக்கு தண்ணீர் பந்தல் திறப்பதற்கான அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் தண்ணீர் பந்தல் திறக்க எந்த ஆட்சேபனையும் இல்லை. தண்ணீர் பந்தல் அமைப்பதன் வாயிலாக எந்தவொரு அரசியல் ரீதியான செயல்பாட்டிலும் ஈடுபடக்கூடாது. தண்ணீர் பந்தல் திறப்பின்போது தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

தண்ணீர் பந்தல் திறக்க விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சியும், வேட்பாளரும், ஆணையத்தின் மேற்கண்ட வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, சுகாதாரம், தூய்மையான குடிநீர் தொடர்பான அரசாங்கத்தின் பிற அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் கோரிக்கையின் அடிப்படையிலும் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றியும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தண்ணீர் பந்தல் திறக்க அனுமதிக்கலாம்.

அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் அவரவருடைய எல்லைக்குள் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி சரியான முறையில் தண்ணீர் பந்தல் செயல்பாடுகள் நடைபெறுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story