பராசக்தி வெயிலுகந்தம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா

பராசக்தி வெயிலுகந்தம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
பராசக்தி வெயிலுகந்தம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா
Published on

விருதுநகர் பராசக்தி வெயிலுகந்தம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா நேற்று நடைபெற்றது. கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பொங்கல் திருவிழாவையொட்டி தினசரி அம்மன் சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதனைதொடர்ந்து நேற்று கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கலிட்டு தங்கள் பிரார்த்தனையை செலுத்தினர். வெயிலுகந்தம்மன் பல்லக்கில் எழுந்தருளி நகர்வலம் வந்து அம்மன் கோவில் திடலில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று அக்னிச்சட்டி எடுக்கும் வைபவம் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com