நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 15 Oct 2023 9:30 PM GMT (Updated: 15 Oct 2023 9:30 PM GMT)

கன்னிவாடி, பட்டிவீரன்பட்டி,செம்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

கன்னிவாடி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி கன்னிவாடி, மணியக்காரன்பட்டி, பழைய கன்னிவாடி, தர்மத்துப்பட்டி, கோம்பை, சுரக்காய்பட்டி, மலையாண்டிபுரம், மேலதிப்பம்பட்டி, கீழதிப்பம்பட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, தோனிமலை, ரெட்டியார்பட்டி, காப்பிலியபட்டி, பண்ணைப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, ராமலிங்கம்பட்டி, ஆலத்தூரன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை கன்னிவாடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் காத்தவராயன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, கே.சிங்காரக்கோட்டை, சேவுகம்பட்டி, செங்கட்டான்பட்டி, மருதாநதி அணை பகுதி, கோப்பை, சித்தரேவு, எம்.வாடிப்பட்டி, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி, போடிகாமன்வாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

செம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி செம்பட்டி, பழைய செம்பட்டி, கோடாங்கிபட்டி, முண்டாம்பட்டி, காமலாபுரம், ராமராஜபுரம், பாளையங்கோட்டை, பிரவான்பட்டி, சேடப்பட்டி, ஆத்தூர், சித்தையன்கோட்டை, காமராஜர் அணை பகுதி, பாறைபட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல், கசவனம்பட்டி, அஞ்சுகம் காலனி, பாப்பனம்பட்டி, சமத்துவபுரம், பச்சமலையான்கோட்டை, நடுப்பட்டி, உத்தையன்கவுண்டன்பட்டி, அம்பாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை செம்பட்டி உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story