எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டு வழக்கில் விசாரணை நடத்த தடை


எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டு வழக்கில் விசாரணை நடத்த தடை
x

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டு வழக்கில் விசாரணை நடத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டு வழக்கில் விசாரணை நடத்த காவல்துறைக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஈபிஎஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர். சேலம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை விசாரணையை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் சேலம் மாநகர குற்றப்பிரிவுக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story