விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்


விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்
x
தினத்தந்தி 3 May 2023 6:45 PM GMT (Updated: 3 May 2023 6:46 PM GMT)

விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இக்கூட்டத்தில் 85 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை பெற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, இதன் மீது உடனடியாக விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்ய சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு உத்தரவிட்டார்.


Next Story