பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு


பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு
x
தினத்தந்தி 14 Oct 2023 7:45 PM GMT (Updated: 14 Oct 2023 7:46 PM GMT)

மகாளய அமாவாசையையொட்டி கோவை பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.

கோயம்புத்தூர்
பேரூர்


மகாளய அமாவாசையையொட்டி கோவை பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.


மகாளய அமாவாசை


புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. இது, மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இதை யொட்டி கோவையில் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள நொய்யல் ஆற்றுப்படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு, உறவினர்கள் திதி கொடுத்து வழிபாடு நடத்து வது வழக்கம்.


குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை ஆகிய அமாவாசை நாட்களில் கோவை உள்பட பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பேரூர் படித் துறைக்கு திரண்டு வந்து இறந்துபோன தங்களின் முன்னோர்க ளுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்கின்றனர்.


பக்தர்கள் குவிந்தனர்


இதன்மூலம் இறந்த முன்னோர்களுடைய ஆத்மாக்களின் ஆசீர் வாதம் தங்களுக்கு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பேரூர் நொய்யல் படித்துறையில் அமர்ந்து அரிசி, பருப்பு, காய்கறி எள்சாதம் ஆகியன படையல் வைத்து, இறந்த போன முன்னோர் களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் வழிபாடு நடத்தினால், தங்க ளுக்கு தோஷம் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


மகாளய அமாவாசையையொட்டி நேற்று அதிகாலையில் இருந்தே பேரூர் பட்டீசுவரர் கோவில் மற்றும் நொய்யல் ஆற்றின் படித்துறையில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் இறந்துபோன முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பண கொடுத்து வழிபாடு செய்தனர்.


தண்ணீர் வினியோகம்


இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால், நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது. ஆனாலும் பக்தர்களின் வசதிக்காக பேரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூர் படித்துறையில் சிறப்பு ஷவர் வசதி செய்யப்பட்டு தட்டுப்பாடின்றி தண்ணீா் வினியோகம் செய்யப்பட்டது.


அதைத்தொடர்ந்து பக்தர்கள் பேரூர் கோவிலுக்குச் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து நெய் விளக்கேற்றி, சாமி தரிசனம் செய்தனர். மகாளய அமாவாசையையொட்டி பேரூர் நொய்யல் படித்துறை, பேரூர் பட்டீசுவரர் கோவில் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story