புதுக்கோட்டை உழவர் சந்தையில் தக்காளி ரூ.80 க்கு விற்பனை


புதுக்கோட்டை உழவர் சந்தையில் தக்காளி ரூ.80 க்கு விற்பனை
x

புதுக்கோட்டையில் உள்ள உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ. 80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதுக்கோடை,

காய்கறிகள் விலை ஏறுமுகம்

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதில் காய்கறிகள் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. அதிலும் சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி, இஞ்சி உள்ளிட்டவை தங்கத்தின் விலையை போல தினமும் அதிகரித்து வருகிறது.

புதுக்கோடை மாவட்டத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி திடீரென விலை உயர்ந்தது. ஜூலை மாதம் தொடக்கத்தில் இருந்து ஒரு கிலோ தக்காளி ரூ. 110 வரை விற்பனை செய்யப்பட்டது.

தக்காளி நேரடி கொள்முதல்

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தக்காளியின் விலையை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி புதுக்கோடை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட தக்காளியை 6 உழவர்சந்தையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.80-க்கு விற்பனை

இதையடுத்து பொதுமக்களுக்கு 1 கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிச்சந்தைகளில் கிலோ தக்காளி ரூ 110 க்கு விற்பனையாகும் நிலையில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story