இதுவரை 99 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்


இதுவரை 99 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
x

இதுவரை 99 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி மூலமாக இதுவரை 99 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ெதரிவித்தார்.

கோடை நெல் சாகுபடி பணி

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்துளை கிணறு மூலமாக 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கோடை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மன்னார்குடி, நீடாமங்கலம், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 150 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

99 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

இதுவரை விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக 99 ஆயிரத்து 453 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் எந்தெந்த பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தேவைப்படுகிறதோ? அந்த பகுதியில் உடனடியாக திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி தெரிவித்தார்.


Next Story