நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

பிதிர்காடு அருகே நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
பந்தலூர்
பந்தலூர் தாலுக்கா பிதிர்காடு அருகே காமராஜ் நகரில் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டி உள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து வருவாய்துறையினரிடம், பொதுமக்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரத்துல்லா, பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது உத்தரவின்பேரில் வருவாய் ஆய்வாளர் குரு, கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து மற்றும் வருவாய்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





