தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ்.பேரணி தொடங்கியது: சென்னையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பங்கேற்பு


தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ்.பேரணி தொடங்கியது: சென்னையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பங்கேற்பு
x

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் இயக்க பேரணி தொடங்கியது.

சென்னை,

சட்ட ஒழுங்கை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்து வந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்தது. பிரச்னைக்குரிய இடங்களில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்ட ஒழுங்கை காப்பது மாநில அரசின் கடமை, அதற்காக பேரணியை தடுப்பது நியாயம் இல்லை என கூறி, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்தது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை தொடர்ந்து காவல்துறை அனுமதியுடன் தமிழ்நாட்டின், 45 இடங்களில் ஆர்.எஸ். எஸ். அமைப்பினர், இன்று சீருடை அணிந்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கொரட்டூரில் இன்று மாலை 3 மணிக்கு அணிவகுப்பு அணிவகுப்பு தொடங்கியது. இதனை தொடர்ந்து, பேரணியின் முடிவில் விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.

இந்த பேரணியானது, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கொரட்டூர் மத்திய நிழற்ச்சாலையில் இருந்து தொடங்கி, கிழக்கு நிழற்ச்சாலை, கொரட்டூர் பேருந்து நிலையம் வழியாக மீண்டும் கொரட்டூர் மத்திய நிழற்ச்சாலைக்கு வந்தடையும். சுமார் 3 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட தூரம் நடைபெற உள்ள இந்த பேரணியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்த சுமார் 1200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை கொரட்டூர், கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணி தொடங்கியது பேரணி நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்பூர், நீலகிரியில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினரின் பேரணி நடைபெற்று வருகிறது. ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெறும் இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ra


Next Story