ரூ.18¾ லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் விற்பனை


ரூ.18¾ லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் விற்பனை
x

சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.18¾ லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

கரூர்

ஒழுங்கு முறை விற்பனை கூடம்

கரூர் மாவட்டம், சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான விற்பனை நடைபெறுகிறது. இங்கு அருகே உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றனர். இங்கு நடைபெறும் விற்பனையில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த வாரம் நடந்த விற்பனையில் 51.84½ குவிண்டால் எடை கொண்ட 14 ஆயிரத்து 233 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.21.45-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.17.01-க்கும், சராசரி விலையாக ரூ.20.60-க்கும் என மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 475-க்கு விற்பனையானது.

ரூ.18 லட்சத்து...

அதேபோல் 256.48 குவிண்டால் எடை கொண்ட 549 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.73.79-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.66.99-க்கும், சராசரி விலையாக ரூ.73.29-க்கும் விற்பனையானது.

2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.72.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.53.89-க்கும், சராசரி விலையாக ரூ.67.79-க்கும் என மொத்தம் ரூ.17 லட்சத்து73ஆயிரத்து 417-க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.18 லட்சத்து 75 ஆயிரத்து 892-க்கு விற்பனையானது.


Next Story