வெம்பக்கோட்டையில் தூய்மைப்பணி


வெம்பக்கோட்டையில் தூய்மைப்பணி
x

வெம்பக்கோட்டையில் தூய்மைப்பணி நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

பிரதமர் மோடி தூய்மை பணிகள் சேவை திட்டத்தின்படி வெம்பக்கோட்டையில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பிரின்ஸ், வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வங்கி கிளை மேலாளர்கள், ஊழியர்கள், சுய உதவிக்குழுவினர், தூய்மை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் வெம்பக்கோட்டை யூனியன் அலுவலக வளாகம், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மியாவாக்கி காடுகள் அமைந்துள்ள பகுதியில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

1 More update

Next Story