ராயக்கோட்டை அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு; நீச்சல் பழகிய போது பரிதாபம்.


ராயக்கோட்டை அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு; நீச்சல் பழகிய போது பரிதாபம்.
x
தினத்தந்தி 6 Jun 2023 5:00 AM GMT (Updated: 6 Jun 2023 7:19 AM GMT)

ராயக்கோட்டை அருகே நீச்சல் பழகிய போது கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

ராயக்கோட்டை அருகே நீச்சல் பழகிய போது கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

பள்ளி மாணவன்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள உள்ளட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாக்கப்பன். இவரது மகன் இளவரசன் (வயது10). இவன் ராயக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். மாணவன் தனது தாயார் சாந்தி மற்றும் தனது கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுவர்களுடன் அங்குள்ள விவசாய கிணற்றுக்கு நீச்சல் பழக சென்றான்.

தொடர்ந்து 50 அடி ஆழ கிணற்றில் இறங்கி இடுப்பில் கேன் கட்டி கொண்டு மாணவன் நீச்சல் பழகி கொண்டு இருந்தான். மாணவனின் தாயார் சாந்தி மேலே நின்று ெகாண்டு மகன் நீச்சல் பழகியதை பார்த்து கொண்டு இருந்துள்ளார். அப்போது இளவரசன் இடுப்பில் கட்டி இருந்த கேன் அவிழ்ந்துவிட்டது. இதனால் மாணவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

உடல் மீட்பு

இதை கண்டு சாந்தி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மாணவனை மீட்க முயன்றனர். கிணறு ஆழமாக இருந்ததால் அவர்களால் மீட்க முடியவில்லை. இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கும், ராயக்கோட்டை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

பின்னர் போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீச்சல் பழகியபோது கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story