நீலகிரி மழை காரணமாக 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை-கலெக்டர் அறிவிப்பு


நீலகிரி மழை காரணமாக 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை-கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 July 2023 6:30 PM GMT (Updated: 5 July 2023 6:30 PM GMT)

நீலகிரி மழை காரணமாக 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை- கலெக்டர் அறிவிப்பு

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் 3-ந் தேதி முதல் 4 நாட்களுக்கு முதல் மிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று மழை மிகத் தீவிரமடைந்தது 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. மேலும் பள்ளி கல்லூரி சென்ற மாணவ மாணவிகள் குளிரில் நடுங்கியவாறு சென்றனர். இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குடியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்று கூறப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story