சேந்தமங்கலம், பரமத்திவேலூர் பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தம்


சேந்தமங்கலம், பரமத்திவேலூர் பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 13 July 2023 7:00 PM GMT (Updated: 13 July 2023 7:00 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனாணூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துகாப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதேபோல் வேலூர் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், குப்புச்சிபாளையம், வி.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் சுந்தரராஜன், வரதராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story