மொரப்பூர் பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்


மொரப்பூர் பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 17 Oct 2023 7:00 PM GMT (Updated: 17 Oct 2023 7:01 PM GMT)
தர்மபுரி

மொரப்பூர்:

கடத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மொரப்பூர் துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மொரப்பூர், நைனா கவுண்டம்பட்டி, ராசலாம்பட்டி, சென்னம்பட்டி, எலவடை, தம்பிசெட்டிபட்டி, கிட்டனூர், நாச்சினம்பட்டி, செட்ரப்பட்டி, கல்லூர், பனமரத்துப்பட்டி, அப்பியம்பட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story