தர்மபுரி ஏல அங்காடிக்கு வரத்து அதிகரித்ததால்பட்டுக்கூடுகள் விலை குறைந்தது

தர்மபுரி ஏல அங்காடிக்கு வரத்து அதிகரித்ததால்பட்டுக்கூடுகள் விலை குறைந்தது
Published on

தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 2,512 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 3,492 கிலோவாக அதிகரித்தது. வரத்து அதிகரிப்பால் நேற்று பட்டுக்கூடுகள் விலை கிலோவிற்கு ரூ.26 குறைந்தது. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.499-க்கும், குறைந்தபட்சமாக ரூ.295-க்கும், சராசரியாக ரூ.426.50-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.14 லட்சத்து 89 ஆயிரத்து 434-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com