தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடு விலை அதிகரிப்பு


தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடு விலை அதிகரிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2023 5:00 AM GMT (Updated: 1 Jun 2023 5:00 AM GMT)
தர்மபுரி

தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,473 கிலோ பட்டுக்கூடுகள் வந்தது. இதனிடையே நேற்று அங்காடிக்கு வரத்து 1,757 கிலோவாக அதிகரித்தது. நேற்று முன்தினம் ரூ.517-க்கு விற்பனையான ஒரு கிலோ பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.33 அதிகரித்தது. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.550-க்கும், குறைந்தபட்சமாக ரூ.269-க்கும், சராசரியாக ரூ.411.26-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.7 லட்சத்து 22 ஆயிரத்து 855-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.


Next Story