சிவராத்திரியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவராத்திரியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

சிவராத்திரியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

வேலாயுதம்பாளையம் அருகே உள்ள நஞ்சை புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில் சிவராத்திரியையொட்டி சுவாமிக்கு பால், தயிர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல் காகிதபுரம், தோட்டக்குறிச்சி மண்மங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story