விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே வன்னிகோனந்தல் கிராமத்தில் பகத்சிங் மற்றும் விவேகானந்தர், விஜயதசமியை முன்னிட்டு பகத்சிங் வித்யாலயா பள்ளியில் சிறுவர் சிறுமியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வாய்ஸ் ஆப் தென்காசி பவுன்டேஷன் நிறுவனர் அ.ஆனந்தன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பால்ராஜ் மற்றும் சுப்பிரமணியன், பள்ளி ஆசிரியர் ராம்குமார், ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





