எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்
x

மதுரையில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மதுரை

மாநில உரிமைக்கு எதிரான கருப்புச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், தேசிய புலனாய்வு முகமை நடத்தும் சோதனையில் பொய் வழக்குகளில் அப்பாவிகளை கைது செய்வதை கை விட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கிரைம் பிரான்ஞ் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் மாநிலச் செயலாளர் அபுபக்கர் சித்திக் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வரவேற்றார். வக்கீல் அபுதாகிர், வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன், தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக், தி.மு.க. தலைமை நிலைய குழு உறுப்பினர் வக்கீல் பாக்கியநாதன், மக்கள் கண்காணிப்பகம் செயல் இயக்குனர் ஹென்றி திபேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில், தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் நன்றி கூறினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கண்டன முழக்கங்களை பதிவு செய்தனர்.


Related Tags :
Next Story