தந்தை திட்டியதால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


தந்தை திட்டியதால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

தந்தை திட்டியதால் மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

மருத்துவ கல்லூரி மாணவர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் அம்மையார் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் மைத்ரேயன் (வயது 19). இவர் கோயம்புத்தூரில் உள்ள அரசினர் மருத்துவக் கல்லூரியில் டி பார்ம் படித்து வந்தார். கடந்த 3 மாதங்களாக இவர் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவரது தந்தை பழனி இவரை கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த மைத்ரேயன் நேற்று முந்தினம் இரவு தனது அறையில் தூக்குப்போட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை அவர் வெளியே வராததால் வீட்டில் உள்ளவர்களுக்கு சந்தேகம் அடைந்து கதவை தட்டினார்கள்.

தற்கொலை

ஆனால் கதவு திறக்கப்படாததால் ஆர்.கே. பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவரது தந்தை பழனி ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மைத்ரேயன் உடலை பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story