பாம்பு கடித்து மாணவி சாவு


பாம்பு கடித்து மாணவி சாவு
x
தினத்தந்தி 7 July 2023 7:45 PM GMT (Updated: 7 July 2023 7:45 PM GMT)

வத்தலக்குண்டு அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவி பலியானார்.

திண்டுக்கல்

வத்தலக்குண்டு அருகே விருவீடு தருமத்துப்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை. விவசாயி. இவரது மகள் பிரதிக்ஷா (வயது 6). இவள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு செல்லத்துரை, தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் அவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. அப்போது வீட்டுக்குள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த பிரதிக்ஷாவை கடித்துவிட்டு சென்றுவிட்டது.

இதற்கிடையே நேற்று காலை பிரதிக்ஷா மயங்கி நிலையில் கிடந்தாள். இதனால் அவளை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, பிரதிக்ஷாவை பாம்பு கடித்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவள் பரிதாபமாக இறந்தாள்.


Related Tags :
Next Story