லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 6 Sep 2023 7:00 PM GMT (Updated: 6 Sep 2023 7:01 PM GMT)
நாமக்கல்

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே உள்ள காளியப்பனூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 44). லாரி டிரைவர். இவர் கடந்த 5 ஆண்டுகளாக காச நோயால் அவதிப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை தியாகராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story