வெவ்வேறு இடங்களில் 5 பேர் தற்கொலை


வெவ்வேறு இடங்களில் 5 பேர் தற்கொலை
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கூலித்தொழிலாளி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா புதூர் அருகே உள்ள ஏரிக்கரையை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 50). கூலித்தொழிலாளி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த கோவிந்தன் கீழ்மத்தூரில் உள்ள வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நில புரோக்கர்- சிறுமி

கிருஷ்ணகிரி பெத்தனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (64). நில புரோக்கர். இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கண் ஆபரேசன் செய்து கொண்டார். அதன் பிறகு உடல் நலக்குறைவால் இருந்த ஆரோக்கியசாமி மனஉளைச்சல் காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓசூர் ஜூஜூவாடி மாருதி நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் மதுமிதா (16). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதியவர்

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள புதூரை சேர்ந்தவர் சேட்டு என்கிற வெங்கடேஷ் (27) கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதுதொடர்பாக குடும்பத்தகராறு இருந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜார்கலட்டியை சேர்ந்தவர் சூடப்பா (71). குடும்ப பிரச்சினையால் முதியவர் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story