காரிமங்கலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை


காரிமங்கலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 1 Jun 2023 5:00 AM GMT (Updated: 3 Jun 2023 2:53 AM GMT)
தர்மபுரி

காரிமங்கலம்

காரிமங்கலம் அருகே உள்ள கிட்டேசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 47). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story