பாலக்கோடு அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


பாலக்கோடு அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 15 Jun 2023 7:00 PM GMT (Updated: 16 Jun 2023 1:02 AM GMT)
தர்மபுரி

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள சூடானூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மலர் (35). இவர்களுக்கு திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் செல்வராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கடன் பிரச்சினை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்தார். இதற்கிடையே கடந்த 12-ந் தேதி செல்வராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்தார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் செல்வராஜ் இறந்தார். இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story