விவசாயி விஷம் குடித்து தற்கொலை

தொப்பூர் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நல்லம்பள்ளி
தொப்பூர் அருகே கமலநத்தம் பொன்நகரை சேர்ந்தவர் சேட்டு (வயது45). விவசாயி. இவர் விபத்து ஒன்றில் கால் பாதிப்பு ஏற்பட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 27-ந்் தேதி அவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது சேட்டு ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





