சேரன்மாதேவியில் ஆசிரியர் தின விழா
சிவந்தி மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு வனத்துறை அதிகாரி குணசீலன், பள்ளி செயலர் காமராஜ், பள்ளி முதல்வர் மரியஹெலன் சாந்தி மற்றும் அனைத்து ஆசிரியர்கள் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களால் சிறந்த ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் லிவின் மைக்கேல் தாஸ் மற்றும் ஆசிரியை மகேஸ்வரி ஆகியோருக்கு கேடயம் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். இதில் பள்ளி மாணவர்கள், அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story