புதிய திட்டங்களை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஆசிரியர் சங்கங்கள் நன்றி


புதிய திட்டங்களை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஆசிரியர் சங்கங்கள் நன்றி
x

புதிய திட்டங்களை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஆசிரியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 1-ந்தேதி ஆசிரியர்களுக்கு 4 புதிய திட்டங்களை அறிவித்தார். அதில் அனைத்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி, அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை, உயர்கல்வி படிக்கும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு ரூ.50 ஆயிரம் வரை உயர்வு, அரசின் நலத்திட்ட உதவிகளை சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களுக்கு வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா ஆகியவை இடம்பெற்று இருந்தன.

முதல்-அமைச்சர் அறிவித்த இந்த அறிவிப்புகளுக்குக்கு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக தமிழாசிரியர் கழகம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றங்கள், ஜே.எஸ்.ஆர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர் நலக்கூட்டமைப்பு, டாக்டர் ராதாகிருஷ்ணன் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு இயக்கம், நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழக இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்றம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் இருந்தார்.


Next Story