கஞ்சா பொட்டலங்களுடன் வாலிபர் கைது

கஞ்சா பொட்டலங்களுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா பொட்டலங்களுடன் வாலிபர் கைது
Published on

ராஜபாளையம், 

ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் சேத்தூர் புறநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் 450 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும், அவர் கணபதி சுந்தர நாச்சியாபுரம் பகுதியை சேர்ந்த பிரசாத் (வயது 31) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவர் வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com