மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

சென்னை வியாசர்பாடி ராஜீவ்காந்தி நகர் 19-வது மேற்கு குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 30). கிரேன் ஆபரேட்டரான இவருடைய மனைவி ஜெனிபர் (25). இவர்களுக்கு திருமணம் ஆகி 7 மாதங்களே ஆகிறது.

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறில் ஜெனிபர், கணவருடன் கோபித்துக்கொண்டு பெரம்பூரில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் விரக்தி அடைந்த ஆரோக்கியராஜ், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த எம்.கே.பி.நகர் போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்தனர். அவரது செல்போனை ஆராய்ந்தபோது ஆரோக்கியராஜ் , தற்கொலை செய்வதற்கு முன்பாக பேசிய வீடியோ இருந்தது. அதில் அவர், "என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. போலீசார் என் மனைவி வீட்டிலோ, என் வீட்டிலோ, உறவினர்களிடமோ விசாரிக்காதீர்கள்" என பேசி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story