திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில்மாசி மக திருவிழா

எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மாசி மக விழாக்குழு சார்பில் மாசி மக திருவிழா நேற்று நடந்தது. கோவிலில் அபிஷேகத்துக்கு தேவையான பால், தேன், பன்னீர், தயிர் போன்றவற்றை 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர்.
மாலை அணிந்த பக்தர்கள் திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து பால், தயிர், தேன், பன்னீர் உள்ளிட்டவற்றை தலையில் தாங்கியபடி 4 ரதவீதிகள் வழியாக வலம் வந்து மலைக்கு சென்றனர். இந்த ஊர்வலத்தின் போது சக்தி, சிவன் வேடம் அணிந்த இருவர் நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





