குறிஞ்சி விநாயகர் கோவிலில் வருடாபிஷேகம்

குறிஞ்சி விநாயகர் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் முத்துபிள்ளைமண்டபம் குறிஞ்சி நகர்- நைல் நகர் பகுதியில் குறிஞ்சி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் வருடாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு காலை சம்வச்சரா அபிஷேகம் நடந்தது. முன்னதாக காலை 8 மணி அளவில் விநாயகர் பூஜை, புன்னியாவாசம், கலச பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. தொடர்ந்து காலை 10 மணிக்கு பூர்ணாஹுதி நடந்தது. வருடாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





