குறிஞ்சி விநாயகர் கோவிலில் வருடாபிஷேகம்

குறிஞ்சி விநாயகர் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது.
குறிஞ்சி விநாயகர் கோவிலில் வருடாபிஷேகம்
Published on

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் முத்துபிள்ளைமண்டபம் குறிஞ்சி நகர்- நைல் நகர் பகுதியில் குறிஞ்சி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் வருடாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு காலை சம்வச்சரா அபிஷேகம் நடந்தது. முன்னதாக காலை 8 மணி அளவில் விநாயகர் பூஜை, புன்னியாவாசம், கலச பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. தொடர்ந்து காலை 10 மணிக்கு பூர்ணாஹுதி நடந்தது. வருடாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com