திருப்பூர் மாவட்ட வணிகர்களுக்கு நன்றி


திருப்பூர் மாவட்ட வணிகர்களுக்கு நன்றி
x

ஈரோடு மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெற செய்த திருப்பூர் மாவட்ட வணிகர்களுக்கு நன்றி என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்டம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பூர்


ஈரோடு மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெற செய்த திருப்பூர் மாவட்ட வணிகர்களுக்கு நன்றி என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்டம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மாநாடு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, செயலாளர் லாலா கணேசன், பொருளாளர் அசோகன், மாநகர தலைவர் ஜான் வல்தாரிஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 40-வது வணிகர் தின உரிமை முழக்க மாநாடு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் ஈரோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அனைத்து வணிகர்களுக்கும் நன்றி

திருப்பூர் மாவட்டம் முழுவதும் இருந்து 100 வாகனங்களில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட, மாநகர நிர்வாகிகள், கிளைச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அனைத்து சங்கங்களை சேர்ந்த வணிகர்கள், வியாபாரிகள் கடைகள், நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து திரளாக கலந்து கொண்டு, மாநாடு வெற்றி பெறுவதற்கு வழி வகுத்தனர்.

அனைத்து வணிகர்களுக்கும் திருப்பூர் மாவட்டம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் திருப்பூர் மாவட்டம் சார்பில் தலைமை கட்டிட நிதி மாநில தலைவரிடம் வழங்கப்பட்டது. இதற்கும் உதவிய அனைத்து சங்க நிர்வாகிகள், வணிகர்கள், வியாபாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story