மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தன்னுடைய 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய மந்திரி நிதின் கட்காரி, பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுல பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி!

பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே… தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story