ேபாலீஸ் ஏட்டு உடல் அரசு மரியாதையுடன் தகனம்


ேபாலீஸ் ஏட்டு உடல் அரசு மரியாதையுடன் தகனம்
x

ேபாலீஸ் ஏட்டு உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வம்பன் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன் (வயது 45). இவர் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு காசநோய் இருந்ததால் மருத்துவ விடுப்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று ஆலங்குடிக்கு வந்த வைத்தீஸ்வரன் ஆற்று பாலம் அருகே கீழே விழுந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வைத்தீஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து வைத்தீஸ்வரன் மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட வைத்தீஸ்வரன் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, வைத்தீஸ்வரன் உடலுக்கு அரசு மரியாதை செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி தலைமையில், 30-க்கும் மேற்பட்ட போலீசார் வைத்தீஸ்வரன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க வானத்தை நோக்கி சுட்டு மரியாதை செலுத்தினர். இதையடுத்து வைத்தீஸ்ரவன் உடல் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.


Next Story