அயனாவரத்தில் மனைவியை உயிருடன் எரித்துக்கொன்ற கணவரும் உயிரிழந்தார்


அயனாவரத்தில் மனைவியை உயிருடன் எரித்துக்கொன்ற கணவரும் உயிரிழந்தார்
x

அயனாவரத்தில் மனைவியை உயிருடன் எரித்துக்கொன்ற கணவரும் உயிரிழந்தார்.

சென்னை

சென்னை அயனாவரம் தாகூர் நகர், 3-வது தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 75). இவருடைய மனைவி பத்மாவதி (65). கடந்த 7-ந்் தேதி இரவு கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கருணாகரன், மனைவி மீது மண்எண்ணெய் உயிருடன் தீ வைத்து எரித்தார். உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் பத்மாவதி வலி தாங்காமல் தனது கணவரை கட்டிப்பிடித்தார். இதில் கருணாகரன் உடலில் தீப்பிடித்து எரிந்தது.

படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பத்மாவதி உயிரிழந்தார். ெதாடர்ந்து சிகிச்சை பெற்று வந்த கருணாகரனும் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுபற்றி அயனாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story