இளம்பெண்ணை கர்ப்பமாக்கியவர் சிறையில் அடைப்பு


இளம்பெண்ணை கர்ப்பமாக்கியவர் சிறையில் அடைப்பு
x

இளம்பெண்ணை கர்ப்பமாக்கியவர் சிறையில் அடைப்பட்டார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே உள்ள மாஞ்சான்விடுதி ஊராட்சியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52). இவர், 19 வயது இளம்பெண்ணை பலாத்காரம் செய்து உள்ளார். இதனால் அந்த பெண் கடந்த 24-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்த பெண் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து முருகேசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் சிகிச்சை முடிந்த பின்னர் முருகேசனை போலீசார் கைது செய்து, ஆலங்குடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் முருகேசனை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Next Story