பட்டாசு பதுக்கி வைத்திருந்தவர் கைது


பட்டாசு பதுக்கி வைத்திருந்தவர் கைது
x

பட்டாசு பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி அருகே உள்ள சல்வார்பட்டி பகுதியில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த சல்வார்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் (வயது 48) என்பவர் கையில் வைத்திருந்த சாக்கு பையில் சோதனை நடத்தினார். அதில் அனுமதியின்றி 20 கிலோ சோல்சா வெடிகள் மற்றும் மூலப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தார். இதையடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், மாரியப்பனை கைது ெசய்தனர்.

1 More update

Related Tags :
Next Story