தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது


தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
x

பேட்டையில் தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

பேட்டை:

சுத்தமல்லி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் இசக்கி மகன் பரமசிவன் (வயது 41) கூலித்தொழிலாளி. சுத்தமல்லி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் மகன் நவாப்கான் (36). இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நவாப்கான், பரமசிவனை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பரமசிவன் கொடுத்த புகாரின் பேரில், சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து நவாப்கானை கைது செய்தனர்.


Next Story