தொழிலாளியை கத்தியால் வெட்டிய ரவுடிகள் பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்மஅடி

தொழிலாளியை கத்தியால் வெட்டிய ரவுடிகளை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
தொழிலாளியை கத்தியால் வெட்டிய ரவுடிகள் பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்மஅடி
Published on

சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 26). இவர், புதுவண்ணாரப்பேட்டை 40-வது வார்டில் கழிவுநீர் அகற்றும் லாரியில் மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர், புதுவண்ணாரப்பேட்டை அம்மனியம்மன் தோட்டம் பகுதியில் கழிவுநீர் அடைப்பை லாரி மூலம் எடுக்கும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், வினோத்திடம் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் வெட்டினர். இதில் வினோத்தின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், 2 வாலிபர்களையும் மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து 2 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ரவுடிகளான புது வண்ணாரப்பேட்டை ஜீவா நகரை சேர்ந்த சதீஷ் (21), தண்டையார்பேட்டையை சேர்ந்த மோகன் (24) என்பது தெரிந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com