எடப்பாடி பழனிசாமி மீது அளிக்கப்பட்ட புகார் தொடர்பான ஆவணங்களை திரட்டும் பணி தீவிரம்..!


எடப்பாடி பழனிசாமி மீது அளிக்கப்பட்ட புகார் தொடர்பான ஆவணங்களை திரட்டும் பணி தீவிரம்..!
x

எடப்பாடி பழனிசாமி மீதான வேட்பு மனுவில் பொய்யான தகவல்களை தெரிவித்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பான ஆவணங்களை திரட்டும் பணியை சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

சேலம்,

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவின் பிராமண பாத்திரத்தில் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் மற்றும் ஆண்டு வருவாய் ஆகியவற்றை குறைத்து பொய்யான தகவல் தெரிவித்ததாக தேனி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் மிலானி சேலம் நீதிமன்றத்தில் புகார் மனு கொடுத்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி கலைவாணி மனுவில் உண்மை தன்மை இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவு போலீசார் எடப்பாடி பழனிசாமி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புகார் தொடர்பாக முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் சூரியா, காவல் ஆய்வாளர் புஷ்பராணி ஆகியோர் அதற்கான ஆவணங்களையும் திரட்டி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியின் வங்கி வரவு, செலவு தொடர்பான விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும், புகார் கொடுத்த தேனியை சேர்ந்த மிலானியையும் அழைத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.


Next Story