மத்தூர் அருகே மூதாட்டி வீட்டில் 7 பவுன் நகை, பணம் திருட்டு

மத்தூர் அருகே மூதாட்டி வீட்டில் 7 பவுன் நகை, பணம் திருட்டு
மத்தூர்:
மத்தூர் அருகே உள்ள குண்டேப்பள்ளியை சேர்ந்தவர் சாந்தம்மாள் (வயது 78). இவர் கடந்த 19-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு சாவியை அருகில் உள்ள வீட்டில் வசிக்க கூடிய ராஜேஸ்வரி என்பவரிடம் கொடுத்து விட்டு சென்றார். இந்த நிலையில் சாந்தம்மாள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் 7 பவுன் நகைகள், ரூ.9 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.
கதவு எதுவும் திறக்கப்படாத நிலையில் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது குறித்து சாந்தம்மாள் மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





