அரிசி, பால் உள்ளிட்ட உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடை இல்லை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


அரிசி, பால் உள்ளிட்ட உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடை இல்லை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

தமிழ்நாடு பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் முன்னதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

சென்னை,

தமிழ்நாட்டில் 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்து 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்ட நிலையில், அன்றாட பயன்படுத்தப்படும் உணவு பொருட்களான அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் பால் உள்ளிட்டு பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்பதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு அந்த விதிவிலக்கும் அரசாணை மூலம் திரும்பப் பெறப்பட்டது.

இதை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு அரசு பிறப்பித்த தடை உத்தரவு சரிதான் என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களான உப்பு, அரிசி, பருப்பு, சர்க்கரை,பால், உள்ளிட்ட பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்பதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு அந்த விதிவிலக்கு திரும்ப பெற்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து தமிழ்நாடு பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி டி.ஆஷா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு பிளாஸ்டிக் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் ஆஜரான வக்கீல் நர்மதா சம்பத் ஆஜராகி, ''எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளாமல் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது'' என்று வாதிட்டார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ''பால், பால் பொருட்கள், எண்ணெய், பிஸ்கெட்கள், மருந்து உள்ளிட்ட பொருட்கள் பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்பனை செய்ய அளிக்கப்பட்ட விலக்கை ரத்து செய்து 2020-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்லாததால், தடை உத்தரவை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கு அனுமதி வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ''அன்றாட உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் பேக்கிங் செய்து விற்பனை செய்ய தடை இல்லை. இந்த உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்பனை செய்ய விதிவிலக்கு அளிக்கப்பட்டு, பின்னர் அதை திரும்ப பெற்று பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்கிறோம்'' என்று உத்தரவிட்டனர்.


Next Story