திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குசர்ப்ப காவடி எடுத்து வர பக்தர்களுக்கு தடை


தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 13 Jan 2023 6:46 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரணிய சுவாமி கோவிலுக்கு சர்ப்ப காவடி எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரணிய சுவாமி கோவிலுக்கு சர்ப்ப காவடி எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்.

சர்ப்பகாவடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். அவர்கள் விதவிதமான காவடிகள் ஏந்தியும், வேல் ஏந்தியும், அலகு குத்தியபடியும் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் சில பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்தும் செல்கின்றனர். இந்த சர்ப்ப காவடி எடுத்து வர தற்போது அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

அனுமதி கிடையாது

இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் சட்டத்துக்கு புறம்பாக சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வருகின்றனர். இவ்வாறு பாம்புகளை எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது. இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறி உள்ளார்.


Next Story