தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை


தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை
x

தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை

திருப்பூர்

வீ.மேட்டுப்பாளையம்

வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் வாரச்சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.30-க் கும், சின்னவெங்காயம் ரூ.50-க்கும், பெரிய வெங்காயம் ரூ.35-க் கும், கேரட் ரூ.70-க்கும், பீட்ரூட் ரூ.60-க்கும், வெண்டைக்காய் ரூ.30-க்கும், உருளைக்கிழங்கு ரூ.30-க்கும், பீன்ஸ் ரூ.80-க்கும், முட்டைக்கோஸ் ரூ.30-க்கும், பாகற்காய் ரூ.40-க் கும், அவரைக்காய் ரூ.50-க்கும், சுரைக்காய் ரூ.15-க்கும், கத்திரிக்காய் ரூ.40-க்கும், பீர்க்கங்காய் ரூ.50-க்கும், இஞ்சி ரூ.260-க்கும், மல்லித்தழை கட்டு ரூ.20-க்கும் விற்பனையானது. இந்த தகவல்களை சந்தை வியாபாரி சிவா தெரிவித்தார்.


Next Story