பாமக நிர்வாகி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி உட்பட இருவர் கைது

செங்கல்பட்டில் பாமக நிர்வாகி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி உட்பட இருவரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
பாமக நிர்வாகி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி உட்பட இருவர் கைது
Published on

செங்கல்பட்டு,

செங்கல்பட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 46). செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ம.க. நகர செயலாளரான இவர் செங்கல்பட்டு மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்த இவரை, நேற்றுமுன் தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் நாகராஜை சரமாரியாக வெட்டினர். இதில் நாகராஜ், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவந்த போலீசார், 2 பேரை கைதுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில், இதில் முக்கிய குற்றவாளியான சூர்யா மற்றும் விஜயகுமார் ஆகிய 2 பேர் காஞ்சிபுரம் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கரவாகனத்தில் விரட்டிச்சென்று போலீசார் அவர்களை கைதுசெய்துள்ளனர்.

போலீசார் விரட்டிச்சென்றபோது, இருசக்கரவாகனத்தில் இருந்து இருவரும் தவறி விழுந்தனர். இதில் இருவருக்கும் கால்முறிவு ஏற்பட்டதால், இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலை வழக்கில் இதுவரை 4 பேரை கைதுசெய்துள்ள போலீசார், எஞ்சியுள்ள இருவரையும் தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com