கிருஷ்ணகிரியில் ஊருக்குள் புகுந்த இரண்டு காட்டுயானைகள் - பட்டாசு வெடித்து விரட்டியடித்த வனத்துறை

கிருஷ்ணகிரியில் இரண்டு காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசட்டி கிராமத்திற்குள் இரண்டு காட்டுயானைகள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
யானைகள் வருவதை பார்த்த தோட்ட தொழிலாளர்கள், அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். இதையடுத்து தகவல் அறிந்து ஒசட்டி கிராமத்திற்கு வந்த வனத்துறையினர் ஒலி பெருக்கி மூலம் யானைகள் நடமாட்டம் குறித்து மக்களுக்கு அறிவித்தனர்.
மேலும், வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





