சென்னை சென்டிரல் - கோவை இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்..!!


சென்னை சென்டிரல் - கோவை இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்..!!
x

கூட்ட நெரிசலை தவிர்க்க வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ரெயில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க நெல்லை- கோவை இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை சென்டிரலில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு கோவை நோக்கி செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண். 06035) நாளை (28-ந்தேதி), டிசம்பர் 5, 12, 19, 26 மற்றும் ஜனவரி 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (செவ்வாய்கிழமை) அதே நாள் மதியம் 2.15 மணிக்கு கோவை சென்றடையும்.

மறுமார்க்கமாக, அதே தேதிகளில் கோவையிலிருந்து மதியம் 3.05 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் நோக்கி செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் (06036) அதே நாள் இரவு 9.50 மணிக்கு சென்னை சென்டிரல் சென்றடையும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story